ஸ்ரீ விநாயகர் விரதங்கள்
விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் நான்கு ஓவ்வொரு வாரத்திலும் வரும் வெள்ளிக்கிழமையிலும் (சுக்கிரவாரம்) ஓவ்வொருமாதத்திலும் வரும் வளர்பிறை சதுர்த்தியும் தேய்பிறைசதுர்த்தியும் (சங்கட வறா சதுர்த்தி ) விநாயக சஷ்டியுமே அவை. சிறப்பாக ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே மக்கள் விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகின்றார்.மிகப் பழங்காலத்தில் ஆவணித் திங்களை முதல் மாதமாகக் கொண்டு மாதங்களைக் கணித்தல் பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைக்குரியது. சிங்க ஒரை (சிம்ப ர்லக்கணம்) என்றும் அதற்குரிய திங்கள் ஆவணி ஆதலின் ஆவணி தொடங்கி மாதங்களை கணக்கிடுதல் ஓரு முறை என்றும் பண்டையோர் கொண்டிருந்தனர். இந்த ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியே விநாயகர் அவதரித்த நாளாகும் என்பர் ஓரு சமயம் உமாதேவியார் விநாயகர் மந்திரமாகிய ஏகாகஷரத்தை உபதேசமாகக் கேட்டுப் பிள்ளையாரை உபாசித்து வந்தார். விநாயகர் ஆறு திருக்கரங்களோடும் யானை முகத்தோடும் வெண்ணிறமான குழந்தையாகப் பாலசந்திர விநாயகர் என்ற திருப்பெயர் தாங்கி உமாதேவிக்கு மகனாகத் தோன்றினார்.
அநசோமவாரமும் (திங்கட்கிழமை) சிம்ம இலக்கணமும் கூடிய நாளாகும் ஆகையால் ஆவணிச் சதுர்த்தி மிகச் சிறப்புடையதாகக் கருதப்பெறுகிறது.
*********************************************************************************
விநாயக சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவம் அமைத்து. அதில் விநாயகரை மந்திரம் பாவனை கிரியைகளால் எழுந்தருளச் செய்து அபிஷேக அலங்காரங்கள் செய்து நிவேதனப் பொருள்கள் வைத்துப் போற்றி வழிபடுதல் முறையாகும். நிவேதன வகையில் மோதகம் அப்பம் எள்ளுருண்டை அவல் பெரி கரும்பு விளாம்பழம் முதலியவை சிறந்தவையாகும். அவருக்கு உகந்த மலர்கள் தும்பை வன்னி எருக்கு அறுகு கொன்றை முதலியவையாகும் இவ்விதம் பொருமானை வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ புண்ணியஆறுகளிலோ விட்டு விடுவார்கள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறைகளில் வரும் சதுர்த்தி திதிகள் வழிபாட்டுக்கு உகந்தவை. வளர்பிறை ( சுக்லபட்ச) சதுர்த்தி திகதியின் அதிபதியான தேவி தன்னை அவருடைய இருப்பிடமாகச் செய்து கொள்ளுமாறு வேண்டினாள் அதற்கு அருள் புரிந்த விநாயகர் நான் உனக்குமத்தியானத்தில் காட்சி அளித்த படியால் சுக்லபட்ச சதுர்த்தியும் மத்தியானமும் கூடிய நன்னாளில் என்னை வழிபடுவோர் என் அருளைப் பெறுவர். சதுர்த்தியன்று ஆகாரமில்லாமல் என்னை வழிபடுவோருக்கு அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பேறுகளையும் வழங்குவேன் என்றார்.
*******************************************************************************
ஆவணித் திங்கள் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இந்தச் சதுர்த்தி விரதத்தைத் தொடங்க வேண்டும் அன்று விடியற்காலையில் எழுந்து நீராடி அன்றாடக் கடமைகளைச் செய்த பிறகு அர்ச்சனைக்குரிய மலர்களையும் மாற்றும் அபிஷேகப் பொருட்கள் தூபதீபம் ப10சைக்குரிய பொருட்களையும் சேகரித்துப் பூசை மண்டபத்தை அமைத்து விநாயகரை வழிபடுதல் வேண்டும் ர்வ்வாறு அடுத்த மாதவளர்பிறைச் சதுர்த்தி வரையில் நாள்தோறும் முறைப்படி பூசைவேண்டும்.இந்த முப்பது நாள்களிலும் ஆகாரம் பகலில் உறக்கம் இல்லாமல் இந்திரிய ஆசைகளை நீக்கி இறைஎண்ணத்திலேயே ஈடுபட வேண்டும் 31வது நாள் விருந்தினர் ஏழைகளோடு இருந்து உணவு உண்ணவேண்டும.முப்பது நாள் உண்ணாவிரதம் இருக்க இயலாதவர்கள் பூசைக்கு முதல்நாளாவது அப்படி இருந்து மற்ற நாட்களில் பால் பழம் அவிசு (உப்பின்றி சமைத்த உணவு) முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை உண்ணலாம். முப்பது நாள் விரதம் ர்ருக்கமுடியாதவர்கள் பூசை தொடங்கிய ஒரு நாளாவது உணவு உறக்கம் இச்சை முதலியவற்றை நீத்து இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
*********************************************************************************
கிருஷ்ணபட்ச சதுர்த்தியின் அதிபதியான சக்தி விநாயகரை வழிபட்டபோது அவர் கூறினார் சந்திரோதயத்தில் நீ என்னை வழிபட்டதால் கிருஷ்ணபட்ச சதுர்த்தியும் சந்திரோதயமும் கூடிய காலம் முக்கிய விரதநோரமாகும்.அப்பொழுது என்னை வழிபடுவோருக்கு என் அருள் நிச்சையம் கிடைக்கும். சங்கடவறர சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்போரின் சங்கடமெல்லாம் தீர்ந்து விடும் உனக்கும் சங்கஷ்டவறரணி என்ற பெயர் உண்டாகட்டும் என்றார்.அங்காரகன் விநாயகரை ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தியில் (மாசி மாததேய்பிறை சதுர்த்தி) பூசை செய்து பேறு பெற்றான் அதனால் செவ்வாயும் சங்கடவறர சதுர்த்தியும் சேரும் நாள் மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். மாசி மாததேய்பிறைச் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி வருமானால் அன்று கணபதிக்கு உகந்த சங்கடவறர சதுர்த்தி விதரத்தைத் தொடங்குவார்கள்.சுங்கடவறர சதுர்த்தியன்று காலை முதல் சந்திரோதயம் வரை நீர் தவிர வேறு ஏதும் உட்கொள்ளாமல் சந்திரனைப்பார்த்து பின்னர் அருக்கியம் கொடுத்து (மந்திர நீர் இறைத்தல்) 21 அறுகம்புல் கொண்டு விநாயகரின் 21 திருப்பெயர்களை அர்ச்சித்து அதன்பின் உப்பு காரம் சேர்க்காத உணவை உட்கொள்ளவேண்டும்.இரவு கண்விழித்து விநாயகரின் கதைகளைக் கேட்க வேண்டும் இவ்வாறாக ஒராண்டு காலம் சதுர்த்தி நாட்கள் தோறும் விடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும்.
*****************************************************************************
ஆண்டு முழுவதும் 24 சதுர்த்திகளிலும் விரதம் மேற்கொண்டு ஆவணி சுக்கில சதுர்த்தியில் விதரத்தைப் பூர்த்தி செய்து விநாயகரை வழிபடுவதன் வழி பெறற்கரிய பேறுகளைப் பெறலாம்.விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற 21 பத்திரங்கள்( இலைகள்) வருமாறு: அலரி துளசி மருதமர இலை எருக்கு அறுகு ( வேருடன்கூடிய வெள்ளறுகு மிகச் சிறந்தது என்று கூறுவர்) கையாந்தகரை (கரிசிலாங்கண்ணி) முள்ளி அரசமர ர்லை பச்சை(மாசிப்பச்சை) நாயுருவி நாவல்மர ர்லை எலுமிச்சைர்லை நொச்சி சாதிப்பூ ர்லை ர்லுப்பைமர ர்லை இலந்தைமர இலை தேவதாருமர இலை மாதுளை இலை விஷ்ணுகாந்தி இலை.விநாயகர் சஷ்டி ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் சோம வாரமும் சிம்ம இலக்கணமும் கூடிய நன்னாளில் கயமுகாசுரனைச் சம்ஹாக்கும் பொருட்டு விநாயகர் அவதரித்தார். அவர் கயமுகாசுரனை அடக்கி வாகனமாக்கிக் கொண்டு வரலாற்றையும் அறிந்துள்ளோம். முருகளைப் போலவே விநாயகப் பெருமானுக்கும் சஷ்டி விரதம் உகந்ததாகிறது. ஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது. அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டுமலைப்பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார்.
விநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப்பாம்பாக மாறிஇருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார். விநாயகரே! எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் சகல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார்.இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி குமார சஷ்டி பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக